Tuesday 20 January 2015

சசிதரூர் ஒத்துழைப்பு கொடுத்தார், பலரிடம் விசாரணை நடத்தப்படும் டெல்லி போலீஸ்

புதுடெல்லி,

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சசி தரூரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது சசிதரூர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று கூறிய டெல்லி போலீஸ் கமிஷ்னர் பாசி, விசாரணை தொடர்பாக பலருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17–ந்தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். இது மர்ம மரணம் என முதலில் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார், பிரேத பரிசோதனை இறுதி அறிக்கைப்படி தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவினர், சசி தரூரின் வீட்டு வேலைக்காரர் நாராயண் சிங், குடும்ப நண்பர் சஞ்சய் தேவன் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 

இதைத்தொடர்ந்து சசி தரூரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சசி தரூரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சுமார் 4 மணி நேரம் சசிதரூரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது மிகவும் அமைதியாக, சிரித்துக் கொண்டே சசிதரூர் பதில் அளித்தாகாக கூறப்பட்டது. விசாரணை தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷ்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர்(சசிதரூர்) விசாரணையின் போது ஒத்துழைப்பு கொடுத்தார். நாங்கள் இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்படும். என்று கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive