Sunday 1 February 2015

1984 சீக்கிய கலவரம்; போலீசால் முடிக்கப்பட்ட வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கிறது மத்திய அரசு - தகவல்கள்

போலீசால் முடிக்கப்பட்ட 1984 சீக்கிய கலவரம் வழக்கில் மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை அமைக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1984–ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை போலீசால் முடிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கு தொடர்பாக முழுவிசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சீக்கிய கலவரம் தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெல்லி சட்டமன்றத் தேர்தலை அடுத்து வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. 

புலனாய்வு குழுவில் இடம்பெறுபவர்கள் அடுத்த மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.பி. மாத்தூர் தலைமையிலான கமிட்டி, 225 வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைக்க உள்துறை அமைச்சகத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கமிட்டி கடந்த டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது, கமிட்டிக்கு மூன்று மாதங்கள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் கமிட்டி 45 நாட்களுக்குள் முடித்து அறிக்கையை அளித்துள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts