Sunday 1 February 2015

மேக்ஸ்வெல், மார்ஷ் நேர்த்தியான ஆட்டத்தால் தப்பிய ஆஸ்திரேலியா 278 ரன்கள் எடுத்தது

முத்தரப்பு கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், மேக்ஸ்வெல், மார்ஷ் ஆகியோரது நேர்த்தியான ஆட்டத்தினால் மோசமான நிலையில் இருந்து தப்பிய ஆஸ்திரேலிய அணி 278 ரன்கள் எடுத்தது.

மூன்று நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் 15 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும், 9 புள்ளிகளுடன் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஒரு வெற்றியும் பெறாத இந்தியா பரிதாபமாக வெளியேறியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெர்த் நகரில் இன்று நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் பிஞ்ச் 3 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட நிலையில் ரன்எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய 12 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பெய்லியும் 2 ரன்களில் அவுட் ஆனார். சுமித் மட்டும் நீதானமாக ஆடினார். மேக்ஸ்வெல்லுடன் கைகோர்த்து ஆடிய சுமித் 40 ரன்களில் அலி பந்துவீச்சில் அவுட் ஆனார். 
ஆட்டம் தொடங்கியதுமே ஆண்டர்சன் இரண்டு விக்கெட்களை எடுத்து ஆஸ்திரேலியாவின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் நிலையை புரிந்துஆடிய மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் தங்களது நேர்த்தியான ஆட்டத்தினால் ரன்சேர்க்க தொடங்கினர். மேக்ஸ்வெல் சற்றுஅதிரடி காட்டி பவுண்டரிகளும் அடித்தார். 

29.3 வது ஓவரில் பவுண்டரி அடித்து மேக்ஸ்வெல் அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து நான்கு விக்கெட்களை வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டு வீரர்களும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தனர். 30 ஓவர்களில் 120 ரன்கள் மட்டும் ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தவேளையில் இவரும் நேர்த்தியான ஆட்டம் மூலம் அணியின் ரன்கணக்கை மோசமான நிலையில் இருந்து மேலே கொண்டு சென்றனர். சதத்தைநோக்கி விளையாடிய மேக்ஸ்வெல் 40 ஓவரில் கடைசி பந்தில் பிராட் பந்துவீச்சில் அவுட் ஆனார். 98 பந்துகளை எதிர்க்கொண்ட மேக்ஸ்வெல் 95 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரியும் அடங்கும். மேக்ஸ்வெல்லுக்கு பக்கபலமாக நின்றுவிளையாடிய மார்ஷ் 60 ரன்களில் அவுட் ஆனார். 

பவுல்க்னெர் (நாட் அவுட்) அரைசதம் அடித்து அணியை வலுவான நிலையை எட்டசெய்தார். ஹேடின் 9 ரன்னிலும், ஜான்சன் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 278 ரன்கள் எடுத்தது. ஓரளவு வலுவானநிலையில் உள்ள ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு 279 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இப்போட்டி  உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இதே இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் சந்திக்க இருப்பதால் அதற்கு இது சரியான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது. மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக்கில் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவிடம் தலா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அதற்கு இந்த முறை வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சி செய்யுமா என்பது  இனிதெரியவரும். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் திரும்புவது ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை மேலும் பலப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இங்கிலாந்து தனது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இயான் பெல்லும், மொயீன் அலியும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts