![](http://img.dailythanthi.com/Images/Article/201502011026084302_Kiran-Bedi-Will-Take-Delhi-to-New-Heights-Says-PM-Modi-at_SECVPF.gif)
டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்தார். கிரண் பேடியை பாராட்டிய பிரதமர் மோடி, டெல்லிக்கு நிலையான அரசு தேவைப்படுகிறது. அரசாங்கத்தை நடத்துவதில் அனுபவம் உள்ள மக்கள், டெல்லிக்கு தேவைப்படுகிறார்கள். கிரண் பேடிக்கு நிர்வாக அனுபவம் இருக்கிறது. மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற வலுவான நோக்கங்கள் கொண்ட பெண் அவர். டெல்லி வரலாற்றில் கிரண் பேடி பங்கு கொண்டவர். சிட்டியில் உள்ள ஒவ்வொரு தெருவும் அவருக்கு தெரியும். 'கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார்' என்று கூறினார்.
சுமார் 1 1/2 மணி நேரத்திற்கு மேலாக பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் பாரதீய ஜனதாவுக்கு முக்கிய எச்சரிக்கையாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையே கடுமையாக விமர்சித்து பேசினார். கடந்த 2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது கனவுகளுடன் வாக்களித்தீர்கள். ஆனால் அந்த கட்சி (ஆம் ஆத்மி கட்சி), உங்களுக்கு துரோகம் செய்து விட்டது. முதுகில் குத்தி விட்டது. உங்கள் கனவுகளை முறித்துப் போட்டார்கள். ஸ்திரமற்ற நிலைக்கு உங்களை தள்ளினார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அவர்களை தண்டித்து, டெல்லியில் உள்ள 7 இடங்களையும் பாரதீய ஜனதாவுக்கு தந்தீர்கள். மக்கள் தொடர்ந்து தவறை செய்ய மாட்டார்கள். டெல்லியில் பாரதீய ஜனதாவுக்கு முழுப்பெரும்பான்மை தாருங்கள். நான் தோளோடு தோள் நின்று உழைக்கக் கூடியவர்களை, நீங்கள் தேர்ந்தெடுங்கள். என்று பிரதமர் மோடி கூறினார்.