Sunday 1 February 2015

கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் என்று கூறினார்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்தார். கிரண் பேடியை பாராட்டிய பிரதமர் மோடி, டெல்லிக்கு நிலையான அரசு தேவைப்படுகிறது. அரசாங்கத்தை நடத்துவதில் அனுபவம் உள்ள மக்கள், டெல்லிக்கு தேவைப்படுகிறார்கள். கிரண் பேடிக்கு நிர்வாக அனுபவம் இருக்கிறது. மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற வலுவான நோக்கங்கள் கொண்ட பெண் அவர். டெல்லி வரலாற்றில் கிரண் பேடி பங்கு கொண்டவர். சிட்டியில் உள்ள ஒவ்வொரு தெருவும் அவருக்கு தெரியும். 'கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார்' என்று கூறினார். 

சுமார் 1 1/2 மணி நேரத்திற்கு மேலாக பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் பாரதீய ஜனதாவுக்கு முக்கிய எச்சரிக்கையாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையே கடுமையாக விமர்சித்து பேசினார். கடந்த 2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது கனவுகளுடன் வாக்களித்தீர்கள். ஆனால் அந்த கட்சி (ஆம் ஆத்மி கட்சி), உங்களுக்கு துரோகம் செய்து விட்டது. முதுகில் குத்தி விட்டது. உங்கள் கனவுகளை முறித்துப் போட்டார்கள். ஸ்திரமற்ற நிலைக்கு உங்களை தள்ளினார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அவர்களை தண்டித்து, டெல்லியில் உள்ள 7 இடங்களையும் பாரதீய ஜனதாவுக்கு தந்தீர்கள். மக்கள் தொடர்ந்து தவறை செய்ய மாட்டார்கள். டெல்லியில் பாரதீய ஜனதாவுக்கு முழுப்பெரும்பான்மை தாருங்கள். நான் தோளோடு தோள் நின்று உழைக்கக் கூடியவர்களை, நீங்கள் தேர்ந்தெடுங்கள். என்று பிரதமர் மோடி கூறினார். 

துருக்கியில் இருந்து திரும்பிய இந்தியர்களிடம் ஐ.எஸ். தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை

பெங்களூரு,

துருக்கியில் இருந்து இந்தியா திரும்பியவர்களிடம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரில் இருந்து சிரியாவிற்கு செல்ல முயற்சித்த 9 பேர் துருக்கி நாட்டு எல்லையில், எல்லையை கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர். அவர்கள் துருக்கி நாட்டு அதிகாரிகளால் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பட்டனர்.  பெங்களூர் வந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பதை உறுதிசெய்ய அவர்களிடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துருக்கியில் எல்லையை கடக்க முயன்ற 9 பேர்களில் ஒரு பெண்ணும், 5 குழந்தைகளும் அடங்கும். 

முதல்கட்ட விசாரணையில் 3 பேர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்தனர் என்பது தெரியவந்ததுள்ளது. அவர்களில் ஒருவர் அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது. 9 பேரும் சுற்றுலா விசாவில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி இஸ்தான்புல் நகருக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் துருக்கி அதிகாரிகளால் கடந்த ஜனவரி 30-ம் தேதி இந்தியாவிற்கு திரும்பி அனுப்பட்டனர். அவர்கள் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும், போலீஸ் அதிகரிகள், மத்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடம் துருக்கி சென்றது குறித்து விசாரிக்கப்பட்டது.

வெளிக்கிழமையில் இருந்து துருக்கியில் இருந்து திரும்பியவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறுகையில், சிரியாவிற்குள் நுழைய முற்பட்டது தொடர்பான அவருடையை விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. மதகலவரங்கள் கொண்ட சிரியாவில் சன்னி இஸ்லாமியர்களுக்கு சமூக சேவை செய்வதற்கு சிரியா சென்றோம் என்று குழுவில்உள்ள நபர் தெரிவித்துள்ளார். ஆனால் துருக்கி வழியாகே ஏன் எல்லையை கடக்க முயற்சி செய்தனர் என்பது தொடர்பாக அவர்கள் பதில் தெரிவிக்கவில்லை. என்றார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தனது குழந்தைகளையும் அழைத்து சென்றது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

1984 சீக்கிய கலவரம்; போலீசால் முடிக்கப்பட்ட வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கிறது மத்திய அரசு - தகவல்கள்

போலீசால் முடிக்கப்பட்ட 1984 சீக்கிய கலவரம் வழக்கில் மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை அமைக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1984–ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை போலீசால் முடிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கு தொடர்பாக முழுவிசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சீக்கிய கலவரம் தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெல்லி சட்டமன்றத் தேர்தலை அடுத்து வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. 

புலனாய்வு குழுவில் இடம்பெறுபவர்கள் அடுத்த மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.பி. மாத்தூர் தலைமையிலான கமிட்டி, 225 வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைக்க உள்துறை அமைச்சகத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கமிட்டி கடந்த டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது, கமிட்டிக்கு மூன்று மாதங்கள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் கமிட்டி 45 நாட்களுக்குள் முடித்து அறிக்கையை அளித்துள்ளது.

41 ஆயிரத்தை வாங்கிவிட்டு, பாலியல் பலாத்காரத்தை மறந்துவிடு பீகார் பஞ்சாயத்து தீர்ப்பு

41 ஆயிரத்தை வாங்கிவிட்டு, பாலியல் பலாத்காரத்தை மறந்துவிடு என்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பீகார் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதிகார் மாவட்டம் கோதா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரகாஷ் ரவிதாஸ் என்பவர், மகாதலித் சமூகத்தை சேர்ந்த திருமணமான பெண்ணை, இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி உதவிபெற ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார். மகாதலித் சமூகத்தை சேர்ந்த அந்தப்பெண் அங்கு சென்றபோது, அவரை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது என்றும் பிரகாஷ் மிரட்டியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊர் பஞ்சாயத்தாரிடம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரித்த பஞ்சாயத்தார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.41 ஆயிரத்தை பிரகாஷ் கொடுக்கவேண்டும். அதனை வாங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரத்தை மறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால் உள்ளூர் ரவுடியான பிரகாஷ் பணமெல்லாம் கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதுதொடர்பான தகராறில் அந்தப்பெண்ணின் கணவரையும் பிரகாஷ் தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கதிகார் போலீஸ் அதிகாரி ஷத்ரநீல் சிங்கை சந்தித்து புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். “பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட நரேஷ் ரவிதாஸ் என்பவரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் ரவிதாஸ் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்.’’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பீகாரில் இதுபோன்ற சம்பவங்களுக்கு பணத்தை வாங்கிவிட்டு மறந்துவிட பஞ்சாயத்தார் உத்தரவிடுவது புதியது இல்லை. கடந்த ஆண்டு கிஷண்கஞ்ச் மாவட்டத்தில், சகோதரர்கள் 4 பேரால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 7 மாத கர்ப்பிணியாக சிறுமி இருந்தபோது விசாரித்த பஞ்சாயத்தார், ‘பாலியல் பலாத்காரம் செய்தவர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு கருவைக் கலைத்து விட வேண்டும்’ என்று தீர்ப்பளித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்தார். சிறுமியின் புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைதுசெய்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கருவுற்றாள். அப்போதும், ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு கருவைக் கலைக்கும்படி பஞ்சாயத்தார் மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேக்ஸ்வெல், மார்ஷ் நேர்த்தியான ஆட்டத்தால் தப்பிய ஆஸ்திரேலியா 278 ரன்கள் எடுத்தது

முத்தரப்பு கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், மேக்ஸ்வெல், மார்ஷ் ஆகியோரது நேர்த்தியான ஆட்டத்தினால் மோசமான நிலையில் இருந்து தப்பிய ஆஸ்திரேலிய அணி 278 ரன்கள் எடுத்தது.

மூன்று நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் 15 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும், 9 புள்ளிகளுடன் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஒரு வெற்றியும் பெறாத இந்தியா பரிதாபமாக வெளியேறியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெர்த் நகரில் இன்று நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் பிஞ்ச் 3 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட நிலையில் ரன்எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய 12 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பெய்லியும் 2 ரன்களில் அவுட் ஆனார். சுமித் மட்டும் நீதானமாக ஆடினார். மேக்ஸ்வெல்லுடன் கைகோர்த்து ஆடிய சுமித் 40 ரன்களில் அலி பந்துவீச்சில் அவுட் ஆனார். 
ஆட்டம் தொடங்கியதுமே ஆண்டர்சன் இரண்டு விக்கெட்களை எடுத்து ஆஸ்திரேலியாவின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் நிலையை புரிந்துஆடிய மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் தங்களது நேர்த்தியான ஆட்டத்தினால் ரன்சேர்க்க தொடங்கினர். மேக்ஸ்வெல் சற்றுஅதிரடி காட்டி பவுண்டரிகளும் அடித்தார். 

29.3 வது ஓவரில் பவுண்டரி அடித்து மேக்ஸ்வெல் அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து நான்கு விக்கெட்களை வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டு வீரர்களும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தனர். 30 ஓவர்களில் 120 ரன்கள் மட்டும் ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தவேளையில் இவரும் நேர்த்தியான ஆட்டம் மூலம் அணியின் ரன்கணக்கை மோசமான நிலையில் இருந்து மேலே கொண்டு சென்றனர். சதத்தைநோக்கி விளையாடிய மேக்ஸ்வெல் 40 ஓவரில் கடைசி பந்தில் பிராட் பந்துவீச்சில் அவுட் ஆனார். 98 பந்துகளை எதிர்க்கொண்ட மேக்ஸ்வெல் 95 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரியும் அடங்கும். மேக்ஸ்வெல்லுக்கு பக்கபலமாக நின்றுவிளையாடிய மார்ஷ் 60 ரன்களில் அவுட் ஆனார். 

பவுல்க்னெர் (நாட் அவுட்) அரைசதம் அடித்து அணியை வலுவான நிலையை எட்டசெய்தார். ஹேடின் 9 ரன்னிலும், ஜான்சன் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 278 ரன்கள் எடுத்தது. ஓரளவு வலுவானநிலையில் உள்ள ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு 279 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இப்போட்டி  உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இதே இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் சந்திக்க இருப்பதால் அதற்கு இது சரியான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது. மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக்கில் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவிடம் தலா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அதற்கு இந்த முறை வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சி செய்யுமா என்பது  இனிதெரியவரும். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் திரும்புவது ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை மேலும் பலப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இங்கிலாந்து தனது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இயான் பெல்லும், மொயீன் அலியும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். 

Thursday 29 January 2015

நடிகர் திலீபும்-மஞ்சுவாரியாரும் சட்டப்படி பிரிகிறார்கள்

எர்ணாகுளம்

மலையாள பட உலகின் முன்னணி நடிகர் திலீப்  இவர் 1995 ஆம் ஆண்டு தன்னுடன சல்லாபம் படத்தில் ந்டைத்த மஞ்சுவாரியாரை காதலித்தார்.
பினர் இவரகளது திருமனம்  1998 ஆம் ஆண்டு நடந்தது.இவர்களுக்கு  மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.  16 வருடங்கள்  சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு  ஏற்பட்டு பிரிந்தார்கள். 

இவர கள் இருக்கவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவுக்கு மற்றொரு நடிகை   காவ்யா மாதவன் தான் காரணம் என கூறபட்டது.

கடந்த ஜூலை மாதம் விவாகரத்து கேட்டு   இருவரும் எர்ணாகுளம் கோர்ட்டில் மனு  தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த  நீதிபதி மோகன் தாஸ் இருவரையும் அழைத்து பேசினார்.   விவாகரத்து முடிவை  மறு பரிசீலனை செய்யும்படி  6 மாதம் அவகாசம் கொடுத்தார்.

 அந்த அவகாசம் முடிவடைந்து நேற்று மீண்டும் வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது  மஞ்சுவாரியரும், திலீப்பும் நேரில் ஆஜரா னார்கள். நீதிபதியிடம் சேர்ந்து வாழ முடியாது விவாகரத்து வேண்டும் என்று முறையிட்டனர்.  இதை யடுத்து  31-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும்  என்று நீதிபதி   அறிவித்தார். நாளை இருவரும் விவாகரத் கிடைக்கும் என  எதிர்பார்க் கப்படுகிறது. இதை தொடர்ந்து இருவரும் சட்டபடி பிரிவார்கள்.

கோஒர்ட்டுக்கு வந்த் திலீப் நிருபர்களிடம் நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம்.   தாயார் என்ற முறையில் அவரது மகளை அவர் எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.என்று கூறினார்.

ஆனால் மஞ்சுவாரியார் எதுவும் பேச வில்லை வரது முகத்தில் வருத்தமும் கடுமையும் தெரிந்தது.

உபேர் கார் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நியூயார்க்,

உபேர் நிறுவன கார் டிரைவரால்  பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அமெரிக்காவில்  உள்ள நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி  மனு தாக்கல் செய்துள்ளார். 

உத்தரப் பிரதேசம் மதுரா அருகேயுள்ள ராம் நகரைச் சேர்ந் தவர் சிவகுமார் யாதவ் (32). டெல்லியில் உபேர் கால் டாக்ஸி யில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம்  நிதி நிறுவன பெண் ஊழியரை சவாரி அழைத்துச் சென்றபோது பலாத்காரம் செய்து கொலைமிரட்டலும் விடுத்தார்.அப்பெண் அளித்த புகாரின் பேரில் சிவகுமார் யாதவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்  உபேர் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி 36 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தனது பெயரை குறிப்பிடாமல் அமரிக்காவில் உள்ள கலிபோர்னியா மத்திய நீதிமன்றத்தில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

Total Pageviews

Popular Posts