![](http://img.dailythanthi.com/Images/Article/201502011114130938_IS-link-being-probed-as-Turkey-sends-back-Indians_SECVPF.gif)
துருக்கியில் இருந்து இந்தியா திரும்பியவர்களிடம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரில் இருந்து சிரியாவிற்கு செல்ல முயற்சித்த 9 பேர் துருக்கி நாட்டு எல்லையில், எல்லையை கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர். அவர்கள் துருக்கி நாட்டு அதிகாரிகளால் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பட்டனர். பெங்களூர் வந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பதை உறுதிசெய்ய அவர்களிடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துருக்கியில் எல்லையை கடக்க முயன்ற 9 பேர்களில் ஒரு பெண்ணும், 5 குழந்தைகளும் அடங்கும்.
முதல்கட்ட விசாரணையில் 3 பேர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்தனர் என்பது தெரியவந்ததுள்ளது. அவர்களில் ஒருவர் அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது. 9 பேரும் சுற்றுலா விசாவில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி இஸ்தான்புல் நகருக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் துருக்கி அதிகாரிகளால் கடந்த ஜனவரி 30-ம் தேதி இந்தியாவிற்கு திரும்பி அனுப்பட்டனர். அவர்கள் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும், போலீஸ் அதிகரிகள், மத்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடம் துருக்கி சென்றது குறித்து விசாரிக்கப்பட்டது.
வெளிக்கிழமையில் இருந்து துருக்கியில் இருந்து திரும்பியவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறுகையில், சிரியாவிற்குள் நுழைய முற்பட்டது தொடர்பான அவருடையை விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. மதகலவரங்கள் கொண்ட சிரியாவில் சன்னி இஸ்லாமியர்களுக்கு சமூக சேவை செய்வதற்கு சிரியா சென்றோம் என்று குழுவில்உள்ள நபர் தெரிவித்துள்ளார். ஆனால் துருக்கி வழியாகே ஏன் எல்லையை கடக்க முயற்சி செய்தனர் என்பது தொடர்பாக அவர்கள் பதில் தெரிவிக்கவில்லை. என்றார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தனது குழந்தைகளையும் அழைத்து சென்றது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment