ஐதாராபாத்தில் இன்று அதிகாலை நடந்த சோதனையில் 200 குழந்தை தொழிலாளர்களை போலீசார் மீட்டுள்ளனர். அதில் சில குழந்தைகள் 6 வயதுக்கும் குறைந்தவர்கள் என்பதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் வளையல் தயாரித்தல் தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் பிற அபாயாகரமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பீகார் மற்றும் உத்தரபிரேதேச மாநிலத்தை சேர்ந்த இந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ரூ 20 ஆயிரம் கொடுத்து வேலைக்கு அழைத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளை அழைத்து வந்த யாசின் பெகல்வான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
0 comments:
Post a Comment