Thursday 25 December 2014

ஆன்லைனில் டாப்-அப் செய்யும் வசதி: மும்பை மெட்ரோ அறிமுகம்

மும்பை,

மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ஸ்மார்ட் கார்டு வசதி மூலம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் டிக்கெட் எடுத்துக் கொள்கின்றனர். சென்னையிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் வசதி உள்ளது. ஆனால், இதற்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. அதனால், பயணிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு வசதி வரவுள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக நவீன வசதிகளை அளிக்கும் பொருட்டு இண்டர்நெட் வசதி கொண்ட செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் இருந்து அவர்களாகவே தங்கள் ஸ்மார்ட் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளும் ஆன்லைன் டாப்-அப் வசதியை மும்பை மெட்ரோ ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியை 50-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் இண்டர்நெட் பேங்கிக், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளில் பெறலாம்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive