உமர்அப்துல்லா - அமித்ஷா சந்திப்பு தொடர்பான தகவலை பாரதீய ஜனதா கட்சி மறுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பார்த்தபடியே தொங்கு சட்டசபை அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜார்கண்டில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சி, இங்கு 25 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2–வது பெரிய கட்சியாக வந்துள்ளது. இங்கு முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 12 இடங்களுடன் 4–வது இடத்தில் உள்ளது.
மாநிலத்தில் ஆட்சியை அமைக்க பாரதீய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலை ஆட்சியில் இருந்து வெளியேறும் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர்அப்துல்லா, டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியது. இந்த தகவல்களை பாரதீய ஜனதா கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதேவ் டூவிட் செய்கையில், "டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களை சந்தித்து பேசினர் என்பது தொடர்பான செய்து முற்றிலும் அடிப்படையற்றது." என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே காங்கிரஸ், முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க நாங்கள் எங்களது ஆதரவை தெரிவித்துவிட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பார்த்தபடியே தொங்கு சட்டசபை அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜார்கண்டில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சி, இங்கு 25 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2–வது பெரிய கட்சியாக வந்துள்ளது. இங்கு முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 12 இடங்களுடன் 4–வது இடத்தில் உள்ளது.
மாநிலத்தில் ஆட்சியை அமைக்க பாரதீய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலை ஆட்சியில் இருந்து வெளியேறும் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர்அப்துல்லா, டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியது. இந்த தகவல்களை பாரதீய ஜனதா கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதேவ் டூவிட் செய்கையில், "டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களை சந்தித்து பேசினர் என்பது தொடர்பான செய்து முற்றிலும் அடிப்படையற்றது." என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே காங்கிரஸ், முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க நாங்கள் எங்களது ஆதரவை தெரிவித்துவிட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment