சபரிமலை,
கேரளாவின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலை தேசிய புனிதயாத்திரை தலமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
நிதி ஒதுக்கீடு
சபரிமலையை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அதில் முதல் கட்ட மேம்பாட்டு நிதியாக ரூ.500 கோடியை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரியில் கேரளாவிற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை கோவில் நிர்வாகத்தினர் சந்திக்க உள்ளனர். கேரளாவில் புகழ் பெற்ற 35வது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வர இருக்கிறார்.
12 வரிசை வளாகங்கள்
சபரிமலையின் மேம்பாட்டிற்கு வன நிலங்கள் தேவையாக உள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து வரும் ஆயிரக்கணக்கான புனித பக்தர்கள் எளிதாக நகர்ந்து செல்வதற்காக 12 வரிசைகள் கொண்ட வளாகங்கள் கட்டப்பட உள்ளன. அவற்றில் 3 வளாகங்களுக்கான ஒப்பந்த பணிகள் நிறைவேறியுள்ளன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கேரளாவின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலை தேசிய புனிதயாத்திரை தலமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
நிதி ஒதுக்கீடு
சபரிமலையை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அதில் முதல் கட்ட மேம்பாட்டு நிதியாக ரூ.500 கோடியை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரியில் கேரளாவிற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை கோவில் நிர்வாகத்தினர் சந்திக்க உள்ளனர். கேரளாவில் புகழ் பெற்ற 35வது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வர இருக்கிறார்.
12 வரிசை வளாகங்கள்
சபரிமலையின் மேம்பாட்டிற்கு வன நிலங்கள் தேவையாக உள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து வரும் ஆயிரக்கணக்கான புனித பக்தர்கள் எளிதாக நகர்ந்து செல்வதற்காக 12 வரிசைகள் கொண்ட வளாகங்கள் கட்டப்பட உள்ளன. அவற்றில் 3 வளாகங்களுக்கான ஒப்பந்த பணிகள் நிறைவேறியுள்ளன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment