Thursday 25 December 2014

ரெயில்வே துறையை தனியார்மயமாக்க மாட்டோம்: பிரதமர் மோடி உறுதி

வாரணாசி,

வாரணாசியில் டீசல் ரெயில் என்ஜின் தொழிற்சாலையை துவக்கி வைத்த பிரதமர் மோடி, இந்திய ரெயில்வே துறையை தனியார் மயமாக்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.

ரெயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாகவும், இந்திய ரெயில்வேயின் திறமைகளை மேம்படுத்த 4 ரெயில்வே பல்கலைக்கழகங்களை அமைப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ரெயில்வே துறையை மாற்றப்போவதாகவும் பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

சொந்த தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரர் மதன்மோகன் மாளவியாவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திவிட்டு பின் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்தார். மேலும், தூய்மை இந்தியா திட்டத்திற்கான உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்தார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive