இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 148 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இதனை அடுத்து தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 16ந்தேதி அந்நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தீவிரவாதிகளின் கொடூர செயல்களுக்கு அவர்கள் விலை கொடுக்கும் வகையில் சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் நவாஸ் ஷெரீப்
இதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் முக்கிய அரசியல் கட்சிகள் நேற்று கூடி விவாதித்துள்ளனர். இது தொடர்பான கூட்டம் 11 மணிநேரம் தொடர்ந்து நீடித்தது. கூட்ட முடிவில் தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை 2 வருடங்கள் வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நீதிமன்றங்களில் ராணுவ அதிகாரிகள் விரைவாக வழக்குகளை நடத்தி முடிப்பார்கள்.
கூட்டத்தில் பாகிஸ்தான் தெரீக்-ஈ-இன்சாப் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-குவாய்ட், கவுமி வாடன் கட்சி, பலுசிஸ்தான் தேசிய கட்சி மற்றும் சில சிறிய அமைப்புகளும் கலந்து கொண்டன. கூட்டத்திற்கு பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் குர்ஷீத் ஷா கூறுகையில், ராணுவ நீதிமன்றங்களை குறைந்த காலத்திற்கு அமைப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 148 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இதனை அடுத்து தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 16ந்தேதி அந்நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தீவிரவாதிகளின் கொடூர செயல்களுக்கு அவர்கள் விலை கொடுக்கும் வகையில் சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் நவாஸ் ஷெரீப்
இதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் முக்கிய அரசியல் கட்சிகள் நேற்று கூடி விவாதித்துள்ளனர். இது தொடர்பான கூட்டம் 11 மணிநேரம் தொடர்ந்து நீடித்தது. கூட்ட முடிவில் தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை 2 வருடங்கள் வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நீதிமன்றங்களில் ராணுவ அதிகாரிகள் விரைவாக வழக்குகளை நடத்தி முடிப்பார்கள்.
கூட்டத்தில் பாகிஸ்தான் தெரீக்-ஈ-இன்சாப் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-குவாய்ட், கவுமி வாடன் கட்சி, பலுசிஸ்தான் தேசிய கட்சி மற்றும் சில சிறிய அமைப்புகளும் கலந்து கொண்டன. கூட்டத்திற்கு பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் குர்ஷீத் ஷா கூறுகையில், ராணுவ நீதிமன்றங்களை குறைந்த காலத்திற்கு அமைப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment