Thursday 25 December 2014

காஷ்மீரில் பாரதீய ஜனதா வீட்டோ பவருடன் உள்ளது: அருண் ஜெட்லி

ஜம்மு,

காஷ்மீரில் ஆட்சியமைக்க பாரதீய ஜனதாவுக்கு பல்வேறு வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அங்கு பாரதீய ஜனதா வீட்டோ பவரை பெற்றுள்ளதாகவும் மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

சுயேட்சை மற்றும் தனிப்பட்ட எம்.எல்.ஏக்களிடம் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து பேசி வருகிறது. காஷ்மீரில் யார் ஆட்சி அமைத்தாலும் அதில் பாரதீய ஜனதா கட்சியின் பங்கு மிக முக்கியதானதாகவே இருக்கும். தற்போது நாங்கள் (பா.ஜ.க.) வீட்டோ அதிகாரத்தை பெற்றுள்ளோம். இதற்கு முன் இந்த அதிகாரம் காங்கிரசின் கையில் இருந்தது. இப்போது பா.ஜ.க.வின் கைக்கு வந்துள்ளது. காஷ்மீரில் ஆட்சியமைப்பதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கட்சி தலைவர் அமித் ஷாவே முடிவு செய்வார். எங்களுக்கு எல்லா வாய்ப்புகளும் திறந்தே இருக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், ஆட்சியமைப்பதற்கே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சி எம்.எல்.ஏக்கள் இந்த பிரச்சனையை விவாதித்து வருகிறார்கள். தொங்கு சட்டசபையில் எந்த மாதிரியான அரசு அமையும், சட்டப்பேரவையில் கட்சியை யார் வழிநடத்தி செல்வார் என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் கட்சி தலைவர் அமித் ஷாவின் வழிநடத்தலில் செல்லும் முடிவுக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive