![](http://img.dailythanthi.com/Images/Article/201412251625454091_2-detained-in-acid-attack-case-in-Srinagar_SECVPF.gif)
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் நவ்ஷெரா பகுதியில் டிசம்பர் மாத தொடக்கத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் மீது திராவகம் வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 11ந்தேதி ஸ்ரீநகரின் நவ்ஷெரா பகுதியில் சட்ட கல்லூரி அருகே 21 வயது நிறைந்த மாணவி ஒருவர் மீது மாருதி காரில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திராவகத்தை வீசி உள்ளார். அந்த மாணவி கல்லூரியில் திறமையானவர். திராவக வீச்சில் மாணவிக்கு 40 சதவீதம் அளவுக்கு முகத்தில் காய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து பலத்த கண்டனங்கள் எழுந்தன. குற்றவாளிகளை உடனே கைது செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவன் பெமீனா பகுதியையும் மற்றொருவன் லால் மாண்டி பகுதியையும் சேர்ந்தவன் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment