![](http://img.dailythanthi.com/Images/Article/201501301153588058_Uber-rape-survivor-files-lawsuit-in-US-court-against-company_SECVPF.gif)
உபேர் நிறுவன கார் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மதுரா அருகேயுள்ள ராம் நகரைச் சேர்ந் தவர் சிவகுமார் யாதவ் (32). டெல்லியில் உபேர் கால் டாக்ஸி யில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் நிதி நிறுவன பெண் ஊழியரை சவாரி அழைத்துச் சென்றபோது பலாத்காரம் செய்து கொலைமிரட்டலும் விடுத்தார்.அப்பெண் அளித்த புகாரின் பேரில் சிவகுமார் யாதவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உபேர் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி 36 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தனது பெயரை குறிப்பிடாமல் அமரிக்காவில் உள்ள கலிபோர்னியா மத்திய நீதிமன்றத்தில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment