கவுகாத்தி,
அதன்படி, நேற்று முன்தினம் மாலை ஷர்மிளா விடுதலை ஆனார். ஆனால், இம்பால் மார்க்கெட் வளாகத்தில் உடனடியாக அவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இரவு முழுவதும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். நேற்று அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு போலீசார் கூறியதை ஷர்மிளா ஏற்கவில்லை.
இதையடுத்து, தற்கொலைக்கு முயன்றதாக புதிய வழக்கு பதிவு செய்து ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். அரசு ஆஸ்பத்திரியில், அவருக்கு மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது.
வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு–காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மணிப்பூரைச் சேர்ந்த இரோம் ஷர்மிளா என்ற பெண், கடந்த 14 வருடங்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவரை மணிப்பூர் போலீசார் கைது செய்து தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர். மணிப்பூர் செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷர்மிளாவை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை ஷர்மிளா விடுதலை ஆனார். ஆனால், இம்பால் மார்க்கெட் வளாகத்தில் உடனடியாக அவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இரவு முழுவதும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். நேற்று அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு போலீசார் கூறியதை ஷர்மிளா ஏற்கவில்லை.
இதையடுத்து, தற்கொலைக்கு முயன்றதாக புதிய வழக்கு பதிவு செய்து ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். அரசு ஆஸ்பத்திரியில், அவருக்கு மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment