மும்பை,
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் லண்டனில் இருந்தபோது தங்கியிருந்த வீட்டை மராட்டிய அரசு ரூ.35 கோடி செலவு செய்து வாங்க முன் வந்துள்ளது.
ஏற்கனவே, இம்மாதம் 10-ந்தேதி இதுசம்பந்தமாக மும்பை பா.ஜ.க. தலைவர் ஆஷிஷ் செலார் நிதிமந்திரி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியிருந்தார். 'லண்டனிலுள்ள அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை வாங்குவதற்கு பிரதமர் மோடி வழிவகை செய்ய வேண்டும். இது அம்பேத்கரை பின்பற்றும் மக்களின் உணர்வுகள் சார்ந்த விஷயம் என்பதால் விரைவில் அந்த வீட்டை வாங்க வழி செய்ய வேண்டும்.' என அதில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், 2,050 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள 3 அடுக்கு மாடிகள் கொண்ட அந்த வீட்டை ரூ.35 கோடி செலவில் வாங்க மராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, டாவோஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மராட்டிய கல்வி மந்திரி வினோத் தாவ்டே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'வரும் ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கரின் பிறந்த நாள் முதல் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த வீடு லண்டனில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்.' என்றார்.
மராட்டிய அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, முன்னாள் முதல்வர் பிரிதிவ்ராஜ் சவான், பிரகாஷ் அம்பேத்கர் தலைவர் பாரிப் பகுஜன் மகாசங் மற்றும் பல்வேறு தலித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் லண்டனில் இருந்தபோது தங்கியிருந்த வீட்டை மராட்டிய அரசு ரூ.35 கோடி செலவு செய்து வாங்க முன் வந்துள்ளது.
ஏற்கனவே, இம்மாதம் 10-ந்தேதி இதுசம்பந்தமாக மும்பை பா.ஜ.க. தலைவர் ஆஷிஷ் செலார் நிதிமந்திரி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியிருந்தார். 'லண்டனிலுள்ள அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை வாங்குவதற்கு பிரதமர் மோடி வழிவகை செய்ய வேண்டும். இது அம்பேத்கரை பின்பற்றும் மக்களின் உணர்வுகள் சார்ந்த விஷயம் என்பதால் விரைவில் அந்த வீட்டை வாங்க வழி செய்ய வேண்டும்.' என அதில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், 2,050 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள 3 அடுக்கு மாடிகள் கொண்ட அந்த வீட்டை ரூ.35 கோடி செலவில் வாங்க மராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, டாவோஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மராட்டிய கல்வி மந்திரி வினோத் தாவ்டே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'வரும் ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கரின் பிறந்த நாள் முதல் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த வீடு லண்டனில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்.' என்றார்.
மராட்டிய அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, முன்னாள் முதல்வர் பிரிதிவ்ராஜ் சவான், பிரகாஷ் அம்பேத்கர் தலைவர் பாரிப் பகுஜன் மகாசங் மற்றும் பல்வேறு தலித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment