Saturday 24 January 2015

வாஜ்பாய்-அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார் கிரண் பேடி

புதுடெல்லி,

டெல்லி மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் பிப்ரவரி 7-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜ.க.சார்பில் முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கபட்டார்.

முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிரண்பேடி டெல்லியில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க.வேட்பாளர் கிரண்பேடி இன்று பா.ஜ.க.மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து ஆசி பெற்றார்.மற்றும் எல்.கே.அத்வானியை சந்தித்தும் ஆசி பெற்றார்.

இது குறித்து கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அத்வானிஜி என்னை ஆசிர்வதித்தார்.மற்றும் தேர்தலுக்காக என்னை கடுமையாக உழைக்கும்படி கூறினார் இவ்வாறு கிரண் பேடி தெரிவித்தார்.

மேலும் பாரதீய ஜனதா கட்சியின் மற்றொரு தலைவரையும்,வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

கிரண்பேடி சந்தித்தது குறித்து அத்வானி கூறியதாவது:-

கிரண்பேடி மீது நான் முழு நம்பிக்கையும் வைத்துள்ளேன்.தேர்தலில் நிச்சயமாக வெற்றிபெறுவார் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.கிரண்பேடி ஒரு புதிய திசையில் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது இவ்வாறு அத்வானி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive