Thursday 22 January 2015

நிதி மந்திரி மாணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கேரளாவில் 27-ந்தேதி முழுஅடைப்பு

திருவனந்தபுரம், 

மதுபான பார் ஊழல் வழக்கில் சிக்கிய கேரள நிதி மந்திரி கே.எம்.மாணி பதவி விலகக் கோரி, கேரளாவில் 27-ந்தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு கேரள மாநில பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்து உள்ளது.இதுதொடர்பாக மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் முரளீதரன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில் கேரள வரலாற்றில் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பே நிதி மந்திரி அதன் விவரங்களை வெளிப்படுத்தி பார் அதிபர்கள் மற்றும் நகைக்கடைக்காரர்களிடம் முறைகேடாக பணம் வாங்க முயற்சித்து உள்ளார். 

இதுபற்றி மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். முதல்-மந்திரி தனது மந்திரி சபையை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும். நிதி மந்திரி மாணியை பட்ஜெட் தாக்கல் செய்ய விடமாட்டோம். அவர் பதவி விலகக்கோரி வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive