Thursday 22 January 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் ஆனந்த் வேட்பு மனுதாக்கல்

சென்னை

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டார். தி.மு.க வேட்பாளர் ஆனந்த் தனது வேட்பு மனுவை இன்று  தாக்கல் செய்வதாக் அறிவிக்கபட்டு இருந்தது. இந்த இரு கட்சிகளும் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன .

பா.ம.க. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து விட்டது. மற்ற கட்சிகளின் நிலை குறித்து தெரிய வில்லை. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டணி சார்பில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

நேற்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தே.மு..தி.க தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசிய பிறகு 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினோம். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி ஸ்ரீரங்கத் தில் போட்டியிடும். யார் வேட்பாளர், எந்த கட்சி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்பது பற்றி மீண்டும் பேச்சு நடத்தி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.என கூறி உள்ளார். 

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்ன்யூனிஸ்ட் கடசி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து உள்ளது.தனது வேட்பாளராக அண்ணாதுரை என்பவரை அறிவித்து உள்ளது.

தி.மு.க.வேட்பாளர் என்.ஆனந்த்  இன்று  வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் திருச்சி சோழன் நகரில் உள்ள வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும்  அலுவலரும்,  கோட்டாட்சியருமான  மனோகரனிடம் மனுதாக்கல் செய்தார்.அப்போது வேட்பாளருடன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்டசெயலாளர் காடுவெட்டி தியாகராஜன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மகன் ஹபிபுர் ரகுமான் ஆகிய 4 பேர் சென்றனர். 

முன்னதாக காலை 10.30 மணிக்கு தில்லை நகரில் உள்ள திருச்சி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து  ஊர்வலமாக புறப்பட்டார்.இதில் தேர்தல் பணிக்குழு தலைவர் கே.என். நேரு  தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், வெளி மாவட்ட தி.மு.க. செயலாளர் கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive