Saturday 24 January 2015

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது உண்மையான கவுரவம்: வெள்ளை மாளிகை பெருமிதம்

வாஷிங்டன்,

இந்திய குடியரசு தினவிழாவில் அமெரிக்க  ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு   குடியரசு தின விழா அணிவகுப்புகளை பார்வையிடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அவருக்கு அளிக்கபட்டுள்ள மிகப்பெரும் கவுரம் என்று வெள்ளை  மாளிகை தெரிவித்துள்ளது. 

இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக நாளை இந்தியா வருகை தரவுள்ளார். அவரது வருகையையொட்டி டெல்லி முழுவதும் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையையொட்டி வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் ஏர்னஸ்ச் தனது வழக்கமான செய்தி சந்திப்பின் போது தெரிவித்தார். அப்போது அவர்கூறியதாவது:-”

 இந்த சுற்றுப்பயணத்தை அதிபர் ஒபாமா மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்.குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது அவருக்கு அளிக்கப்பட்ட உண்மையான கவுரவம். குடியரசு தினவிழா அணிவகுப்புகளை நேரிடையாக பார்வையிட அங்கு பயணம் மேற்கொள்வதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார். இந்தியாவில் அரசியல் தலைவர்களுடன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள சந்திப்பையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்”  என்று தெரிவித்துள்ளார்.

 இதுவரை எந்தவொரு நாட்டின் தேசிய விழா கொண்டாட்டத்திலும் ஒபாமா பங்கேற்றதில்லை. இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது தான் ஒபாமா முதல் முறையாக கலந்து கொள்ளும் வெளிநாட்டு தேசிய விழா என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive