Wednesday 21 January 2015

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மருத்துவ மற்றும் கண்பரிசோதனை முகாம்

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கோவை போக்குவரத்து இணை ஆணையர் முருகானந்தம் உத்தரவின் பேரில் நேற்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியம், சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அழகப்பசாமி, திருமங்கை ஆகியோர் உள்பட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு வாகன டிரைவர்கள் மற்றும் பஸ் கண்டக்டர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இதில் போக்குவரத்து ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகணேசன் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive