பெர்த்,
இங்கிலாந்து எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போடியில் இந்திய அணி 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 15 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு முடிவில்லை) இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இங்கிலாந்து 5 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், இந்தியா 2 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில் முத்தரப்பு தொடரில் பெர்த்தில் இன்று இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் களம் இறங்கிய தவானும் , ரகானேவும் ஓரளவு சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்து இருந்த போது ஷிகர் தவான் 38(65 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கவுள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போடியில் இந்திய அணி 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 15 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு முடிவில்லை) இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இங்கிலாந்து 5 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், இந்தியா 2 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில் முத்தரப்பு தொடரில் பெர்த்தில் இன்று இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் களம் இறங்கிய தவானும் , ரகானேவும் ஓரளவு சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்து இருந்த போது ஷிகர் தவான் 38(65 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி (8), சுரேஷ் ரெய்னா (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த வீரர்களான ராயுடு (12), ரகானே(73) தோனி(17) பின்னி(7), ஜடேஜா(5), அக்சார் படேல்(1), முகம்மது சமி (25) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தால் இந்திய அணி 48.1 ஓவரில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கவுள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment