![](http://img.dailythanthi.com/Images/Article/201501241801501821_Private-TV-channel-helping-AAP-to-win-Delhi-poll-Shah_SECVPF.gif)
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தனியார் ஹிந்தி டிவி சேனல் உதவி செய்து வருகிறது. அந்த சேனலில் வரும் செய்திகளை எச்சரிக்கையாக கவனியுங்கள் என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-
டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது ஆம் ஆத்மியை மக்களிடத்தில் முழுவீச்சில் கொண்டு செல்லவும், தேர்தலில் வெற்றி பெற வைப்பதாகவும் அந்த தனியார் ஹிந்தி டிவி சேனல் உறுதி பூண்டுள்ளது... இதைவிட யெல்லோ ஜர்னலிசத்திற்கு ஒரு பெரிய உதாரணம் இருக்க முடியாது. நான் மக்கள் எந்த சேனலை பார்க்க வேண்டும் என நிர்பந்தப்படுத்தவில்லை. என்னுடைய கருத்தை சொன்னேன். அதை எடுத்துக் கொள்வதும், கொள்ளாததும் மக்களின் விருப்பம். கிரண்பேடியை டெல்லி தேர்தலுக்காக விலைக்கு வாங்கியதாக கேள்விகள் கேட்கின்றனர். பா.ஜ.க. எப்போதுமே பிரபலங்களை கட்சியில் இணைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த பிரபலங்கள் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களாக இருப்பர். அந்த வகையில்தான் கிரண்பேடி கட்சியில் இணைந்திருக்கிறார். ஆனால், கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை கட்சியில் சேர்ப்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்கள் கட்சி தரப்பிலிருந்து ஏற்கனவே இதுபற்றி தலைவர் சித்தார்த்நாத் சிங் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment