Thursday 22 January 2015

பேஸ்புக்கில் பிரதமர் குறித்து தவறான தகவல் வாலிபர் மீது வழக்குபதிவு

ஐஸ்வால்,

பிரதமர் நரேந்திர மோடி பற்றி சமூக வலைதளமான பேஸ்புக்கில் தவறான தகவலை பதிவு செய்த நபர் மீது மிசோரம் மாநில பாரதீய ஜனதா கட்சி அளித்த புகாரின் பேரில் ஐஸ்வால் போலீசார்  எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். 

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(A) மற்றும் ஐபிசி பிரிவு 500ன் கீழ் பிரதமர் குறித்து தவறான தகவலை பரப்பிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை  எடுத்துவருகிறார்கள் என்று  ஐஸ்வால் போலீஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிரதமர் மோடி பற்றி ”ஹரி பேத் சே” என்ற பேஸ்புக் கணக்கில்  அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டுக்களை பரப்பிய நபர் மீது புகார் செய்யப்பட்டு அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பாரதீய ஜனதா மிசோரம் பிரதேச பொதுச்செயலாளர் சான்ஹிமா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive