புதுடெல்லி,
பாகிஸ்தானில் இயங்கி வரும் ‘ஜமாத் உத் தாவா’ தீவிரவாத அமைப்பினை ஐ.நா. தடை செய்துள்ளது. இந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்காவும் வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், ‘ஜமாத் உத் தாவா’ அமைப்பை பாகிஸ்தான் தடை செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இப்போது அதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இது குறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறுகையில், “நாங்கள் ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம். ‘ஜமாத் உத் தாவா’வின் வங்கிக்கணக்குகளை முடக்கி உள்ளோம். அதன் தலைவரின் வெளிநாட்டுப்பயணத்தை தடை செய்திருக்கிறோம். ஐ.நா. தீர்மானத்தின்படி என்ன தேவையோ அதை செய்வோம்” என்றார்.
‘ஜமாத் உத் தாவா’ அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவருமான ஹபீஸ் முகமது சயீத்தை கைது செய்வது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அப்துல் பாசித், “இப்படிப்பட்ட தனிநபர்களை கைது செய்வது பற்றி ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை” என பதில் அளித்தார்.
பாகிஸ்தானில் இயங்கி வரும் ‘ஜமாத் உத் தாவா’ தீவிரவாத அமைப்பினை ஐ.நா. தடை செய்துள்ளது. இந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்காவும் வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், ‘ஜமாத் உத் தாவா’ அமைப்பை பாகிஸ்தான் தடை செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இப்போது அதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இது குறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறுகையில், “நாங்கள் ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம். ‘ஜமாத் உத் தாவா’வின் வங்கிக்கணக்குகளை முடக்கி உள்ளோம். அதன் தலைவரின் வெளிநாட்டுப்பயணத்தை தடை செய்திருக்கிறோம். ஐ.நா. தீர்மானத்தின்படி என்ன தேவையோ அதை செய்வோம்” என்றார்.
‘ஜமாத் உத் தாவா’ அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவருமான ஹபீஸ் முகமது சயீத்தை கைது செய்வது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அப்துல் பாசித், “இப்படிப்பட்ட தனிநபர்களை கைது செய்வது பற்றி ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை” என பதில் அளித்தார்.
0 comments:
Post a Comment