Thursday 29 January 2015

.வீட்டுமுன் குவிந்த பனியை அகற்றாததால் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரிக்கு அபராதம்

வாஷிங்டன், 

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியின் வீடு பாஸ்டன் நகரில் உள்ள பிங்னி தெரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கடும் பனிப்புயல் வீசியது. இதனால் தெரு முழுவதும் பனிக்குவியல் நிறைந்தது. அவற்றை அந்த தெருவாசிகள் அகற்றி வந்தனர்.
ஆனால் ஜான் கெர்ரியின் வீட்டு முன் குவிந்த பனித்துகள்கள் அனைத்தும் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தது. இது குறித்து நகர நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், பனிக்குவியலை அகற்றாத ஜான் கெர்ரிக்கு அபராதம் விதிக்க முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு 50 டாலர் (சுமார் ரூ.3 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டது.இது குறித்து ஜான் கெர்ரியின் செய்தி தொடர்பாளர் கிளன் ஜான்சன் கூறுகையில், ஜான் கெர்ரி உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறார். அதனால்தான் இந்த சம்பவம் நடந்து விட்டது. எனினும் இந்த அபராதத்தை அவர் உடனடியாக கட்டிவிடுவார் என்று கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive