Saturday 24 January 2015

பாகிஸ்தானில் உள்ள அனைவரும் தீவிரவாதிகள் அல்ல: ராஜ்நாத் சிங் பரபரப்பு பேட்டி

ஹரித்துவார், 

பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒவ்வொரு நாளும் கண்டன குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அங்கு அடுத்தடுத்து வரும் அரசுகள் தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவருவதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி, ஹரித்துவாரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- 

பாகிஸ்தானில் வாழும் ஒவ்வொருவரையும் நான் தீவிரவாதிகளாக நினைக்கவில்லை. அந்த நாட்டிலும் தீவிரவாதத்திற்கு எதிராக குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அங்கு அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகளின் நிலைப்பாடு தெளிவில்லாமல் உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் எல்லைப்பகுதியில் அத்துமீறிய அண்டை நாடான பாகிஸ்தானுக்கு இந்தியா நல்ல பதிலடியை கொடுத்திருக்கிறது. பாகிஸ்தான் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி சரியாகவே கையாள்கிறார். ஒவ்வொரு அடிக்கும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு இப்போது அமெரிக்காவும் கூட எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பாகிஸ்தான் தொடர்ந்து அமெரிக்காவின் நெருக்கடியில் இருப்பதை ஒபாமா விரும்பவில்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறுவதையும் அவர் விரும்பவில்லை. இந்தியாவின் விருந்தோன்மை பற்றி உலகத்திற்கே தெரியும். நாளை இந்தியாவுக்கு வரும் ஒபாமாவும் இதை புரிந்து கொள்வார்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive