ஜம்மு,
காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆர்னியா பகுதி வழியாக நேற்று முன்தினம் மாலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இந்த முயற்சியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.
இதைத்தொடர்ந்து சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. சிறிய ரக ஆயுதங்களால் இரவு முழுவதும் விட்டு விட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று காலையிலும் செனாஸ், பீடல், பிண்டி பகுதிகளில் தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தானின் இத்தகைய அடாவடியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். அதன்படி சிறிய ரக ஆயுதங்களால் இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் தாக்குதல் நடந்தது. எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
0 comments:
Post a Comment