Saturday 24 January 2015

ஒடிசாவில் ரெயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் குண்டுவைத்து தகர்த்தனர்: ரெயில் சேவைகள் பாதிப்பு

ராயகாதா,

ஒடிசா மாநிலத்தின் ரயாகதா மாவட்டத்தில்  விசாகப்பட்டினம்-ராய்பூர் செல்லும் ரெயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகள் மூலம் மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நட்ந்த்தியுள்ளனர். இதனால் முனிகவுடா ரெயில் நிலையத்துக்கு அருகே  ஒரு மீட்டர் நீளத்துக்கு தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரெயில்வே ஊழியர் லேசான காயம் அடைந்துள்ளார். தண்டவாளம் சேதம் அடைந்துள்ளதால் அதிகாலை முதல் அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 6-க்கும் மேற்பட்ட ரெயில்கள் முனிகவுடா மற்றும் ராயகதா ரெயில்வே நிலையங்களில் அப்படியே நிறுத்தபட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். 

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பேனர் ஒன்றை கட்டியிருந்த மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். அந்த பேனரில் அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தியாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive