![](http://img.dailythanthi.com/Images/Article/201501241754077012_The-US-President-is-coming-to-India-on-the-invitation-of_SECVPF.gif)
ஜெர்மனி வழியாக வரும் சிறப்பு விமானம் நாளை காலை 10 மணிக்கு இந்தியா வந்தைடைவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன், அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என சுமார் 2 ஆயிரம் பேர் கொண்ட குழுவினரும் வருகின்றனர்.
ஒபாமாவின் வருகையையொட்டி குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணியுடன் அந்த அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும் என்றும், அதன்பிறகு அங்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் மத்திய ஊழியர் நலம் மற்றும் பயிற்சி துறை அறிவித்து உள்ளது.
குடியரசு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்பில், பிரதமர் மோடியின் அபிமான திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம், கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், நேரடி மானிய திட்டம் ஆகியவற்றை விளக்கும் அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தை விளக்கும் வகையில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
0 comments:
Post a Comment