Thursday 22 January 2015

மனிதர்களை ஊனமாகவும் குறை உள்ளவார்களாகவும் படைத்தது இறைவனின் குற்றமே-கோவா முதல் மந்திரி

பனாஜ்

கோவாவில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான திரைப்படவிழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்-மந்திரி லக்‌ஷிமிகாந்த் பர்சேகர் கூறியதாவது:

சில மனிதர்கள் இறைவனின் படைப்பில் ஊனமாகவும் குறை உள்ளவார்களாகவும் படைக்கின்றான் அது அவர்களின் குற்றம் அல்ல அது கடவுளின் குற்றமே கடவுளின் புறக்கணிப்பு என்று கூட கூறலாம்.

சமூகத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு சில விஷயங்களை கடவுள் கொடுக்க மறந்து விடுகிறார். அதனால் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் பாதிக்கபடுகின்றனர்.

கடவுள் செய்த தவறுக்காக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தில் பிறந்த குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

சில மாற்று திறனாளிகளுக்கு அதிக திறமைகள் காணப்படுகின்றன.அவர்கள் சாதரணவர்களை விட அதிக வலிமை உடையவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive