Saturday 24 January 2015

திருமணம் செய்யாவிட்டால் ஆசிட் வீசுவேன் பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் கைது

மும்பை ,

மும்பை அருகே மனோரமா நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார் பாபுராம் யாதவ் இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.ஒருநாள்  வீட்டில் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணின்  பள்ளிசான்றிதழையும் எடுத்து சென்றுவிட்டார்.

அந்த பெண்ணிடம் பாபுராம் யாத்வ் நீ என்னை திருமணம் செய்யாவிட்டல் உன் மீது ஆசிட் வீசிவிடுவேன்.மேலும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

பாபுராம் யாதவால் பாதிக்கபட்ட பெண் காபூர்பாடி போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.

புகாரை பெற்றுகொண்ட போலீசார் மனோஜ்குமார் பாபுராம் யாதவ் மீது  வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive