Thursday 22 January 2015

இந்திய பைக் திருவிழா; ஐரோப்பிய ஸ்டண்ட் சாம்பியன் கிபீசா கோவையில் சாகசம் செய்கிறார்.

கோவை, 

மோட்டார் பைக் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கோவாவில் அடுத்த மாதம் 20, 21 தேதிகளில் இந்திய பைக் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, ஐ.பி.டபில்யூ ஆன் டூர் என்ற டிராவலிங் ஷோ நடத்தப்படுகிறது. அதன்படி, சண்டிகர், ஜெய்ப்பூர், அஹமதாபாத், சூரத் உள்ளிட்ட 8 நகரங்களில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் பைக் ரசிகர்களை கவர்வதற்காக ஐந்து மணி நேர சாகச நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், ஐரோப்பிய ஸ்டண்ட் சாம்பியன் அராஸ் கிபீசாவும் கலந்து கொள்கிறார். நம் நாட்டின் ரெட் புல் ஸ்பான்சர்டு ஸ்டண்ட் பைக் வீரரான அராஸ் ஏற்கனவே, உலக சாகசங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அந்த வரிசையில், அடுத்த மாதம் 1-ஆம் தேதி கோவையில் சாகசம் நிகழ்த்துகிறார். 

உலக அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் பைக் வீரரான அராஸ் கிபீசா அண்மையில் நடந்து முடிந்த ஸ்டண்ட் ரைடிங் யூரோகப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive