Thursday 22 January 2015

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை 24–ந் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை, 
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலையொட்டி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அந்த தொகுதியின் தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகத்தை 24–ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
25–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெற உள்ள வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். முன்னதாக, 23–ந் தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் செல்லும் மு.க.ஸ்டாலின், காலை 9 மணிக்கு சேலம் வீரபாண்டி ஆ.ராஜா மகள் திருமண நிகழ்ச்சியிலும், மாலை 5 மணிக்கு அண்ணா நூலக திறப்பு விழாவிலும், மாலை 6.30 மணிக்கு சேலம் மகுடஞ்சாவடியில் நடைபெறும், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் க.அன்பழகன் இல்லத் திருமண விழாவிலும் கலந்து கொள்கிறார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive