Thursday 22 January 2015

நிலக்கரி சுரங்க ஊழல்: மன்மோகன்சிங்கின் முதன்மை செயலாளரிடம் சி.பி.ஐ. விசாரணை

புதுடெல்லி,
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவின்பேரில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சமீபத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அதையடுத்து, அவருடைய முதன்மை செயலாளரான டி.கே.ஏ.நாயரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது. ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியது தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்றது.
நாயரிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்ற போதிலும், அவரிடம் மறுவிசாரணை நடத்துமாறு கோர்ட்டு கூறியதால், இவ்விசாரணை நடைபெற்றது.
அதுபோல், மன்மோகன்சிங்கின் தனி செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியத்திடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive