சிட்னி, ஜன. 20–
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிது. அதில் கலந்து கொள்ளும் ஈரான் வீரர்கள் பெண் ரசிகைகளுடன் செல்போன் மூலம் ’செல்பி’ போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறி ‘செல்பி’ எடுத்துக் கொள்ளும் வீரர்களுக்கு அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈரான் கால்பந்து பெடரேசன் ஒழுங்குமுறை கமிட்டி தலைவர் அலி அக்பர் முகமது ஷடே தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடான ஈராக்கில் ஆண்கள் விளையாடும் கால்பந்து போட்டிகளை பார்க்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கால்பந்து போட்டியையும் ஈரான் பெண்கள் பார்க்க முடியாது.
0 comments:
Post a Comment