Tuesday 20 January 2015

இலங்கை: கருத்தரங்கில் பங்கேற்க அந்நாட்டு தலைமை நீதிபதிக்கு தடை

இலங்கை: கருத்தரங்கில் பங்கேற்க அந்நாட்டு தலைமை நீதிபதிக்கு தடைகொழும்பு, ஜன. 20–
இலங்கையின் அட்டர்னி ஜெனரல் (அரசு தலைமை வக்கீல்) கொழும்புவில் நேற்று கருத்தரங்கு நடத்தினார். அதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மோகன் பெரீஸ் பங்கேற்பதாக இருந்தது.
அதற்கு இலங்கை வக்கீல்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவருக்கு அழைப்பு வழங்கினால் கருத்தரங்கு வளாகத்தில் இருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக அறிவித்தனர். தங்கள் எதிர்ப்பை அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் மூலம் வக்கீல் சங்க தலைவர் உபுல் ஜெயசூர்யா தெரிவித்தார்.
அதை ஏற்றுக் கொண்ட அட்டர்னி ஜெனரல் கருத்தரங்கில் தலைமை நீதிபதி மோகன் பெரீஸ் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை. அதை தொடர்ந்து அவர் நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்கவில்லை.
மோகன் பெரீஸ் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் விசுவாசி ஆவார். இவருக்கு முன்பு இருந்த தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகே ஒரு வழக்கில் ராஜபக்சே அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தார். எனவே, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவரை பதவி நீக்கிவிட்டு மோகன் பெரீஸ் தலைமை நீதிபதி ஆக நியமிக்கப்பட்டார்.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே கடைசி நேரத்தில் ராணுவ புரட்சி மூலம் தேர்தலை ரத்து செய்துவிட்டு ஆட்சியை தக்க வைக்க முயற்சி கொண்டார். அதற்கு தலைமை நீதிபதி மோகன் பெரீஸ் உறுதுணை இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அக்காரணத்துக்காகவே அவருக்கு வக்கீல்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive