Wednesday 21 January 2015

பள்ளி மாணவிக்கு தொல்லை தட்டிக்கேட்ட அண்ணனுக்கு அடி-உதை

உத்தரபிரதேச மாநிலம் அருகே ஷாமிலி மாவட்டத்தில் கைரான என்ற நகரில் பள்ளிக்கு சென்று வந்த எட்டாம் வகுப்பு மாணவியை அந்த பகுதியில் வசித்து வரும் 3 வாலிபர்கள்  பள்ளிக்கு வரும் போதும் வீட்டுக்கு செல்லும் போதும் மாணவியை கேலி கிண்டலும்  செய்துள்ளனர்.  இதனை மாணவி தனது அண்ணனிடம் கூறி உள்ளார். 

 மாணவியின் அண்ணன்  3 வாலிபர்களிடம் சென்று ஏன் எனது தங்கையை கிண்டல் செய்கிறீர்கள் என கேட்டு உள்ளார்.ஆனால் அந்த வாலிபர்கள் மாணவியின் அண்ணனை   அடித்து உதைத்து உள்ளனர்.

இந்து குறித்து மாணவியின்  அண்ணனும் தந்தையும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கை பதிவு செய்த போலீசார்  மாணவியை கிண்டல் செய்ததாகவும் அவரது அண்ணனை தாக்கியதாகவும் அதே பகுதியை சேர்ந்த 
  நீத்து,உமர்,மானேதஷ்வர் என்ற  3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive