Tuesday 20 January 2015

குமரன் பத்மநாதனை கைது செய்யக்கோரி மனு; இலங்கை கோர்ட்டில் தாக்கல்

கொழும்பு,

இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களில் ஒருவர் குமரன் பத்மநாதன். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இவர் இந்தியாவால் தேடப்படுகிறார். இலங்கை இறுதிக்கட்ட போருக்கு பின்னால் குமரன் பத்மநாதன் கிளிநொச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் இல்லம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதிபர் தேர்தலின்போது ராஜபக்சே அவருக்கு புகலிடம் அளிப்பதாக எதிர்க்கட்சியினர் புகார் செய்தனர்.

இந்த நிலையில், இலங்கையின் மார்க்சிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பிரமுனா இலங்கை மேல்முறையீடு கோர்ட்டில் அவரை கைது செய்யக்கோரி நேற்று ஒரு மனு தாக்கல் செய்தது. கட்சியின் மூத்த தலைவர் விஜிதா ஹெராத் கூறும்போது, ‘‘அவரது நடவடிக்கைகளுக்காக அவரை கைது செய்ய வேண்டும். அவர் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive