Sunday 18 January 2015

உளவு அதிகாரி இடமாற்றம்: இந்தியா மறுப்பு

புதுடெல்லி, 
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைய உதவியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கொழும்பிலிருந்த இந்திய உளவு அதிகாரி, இட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‘‘வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை. கொழும்பிலிருந்து உளவு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது, வழக்கமானது தான். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி தூதரக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதை உங்களில் பலரும் அறிவீர்கள். அதன்படி இலங்கையில் அந்த அதிகாரியின் பதவிக் காலம் 3 ஆண்டு தான்’’ என கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive