Sunday 18 January 2015

மக்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டுவர அ.தி.மு.க. ஆதரவை பெற தயாராக இருக்கிறோம் மத்திய மந்திரி ரவிசங்கர்பிரசாத் பேட்டி

ஆலந்தூர், 

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்து உள்ளது. பிரதமர் மோடி, மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் ராஜ்யசபையில் போதிய ஆதரவு இல்லை.

மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது ராஜ்யசபையில் மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தாமதம் செய்கின்றனர். மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு துரோகம் செய்கின்றனர்.மக்களுக்காக நல்ல திட்டங்களை நிறைவேற்ற அ.தி.மு.க. மட்டுமின்றி சிறுசிறு கட்சிகளிடமும் ஆதரவு பெற தயாராக இருக்கிறோம்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive