அஹமதாபாத்,
சென்னை ஏர்போர்ட் உள்பட நாட்டின் முக்கியமான 4 விமான நிலையங்களை தனியார் மயமாக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூ தெரிவித்தார். குஜராத் விமான போக்குவரத்து துறை மந்திரியுடன் மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய மந்திரி அசோக் கஜபதி ராஜூ, 'பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை அளிப்பதற்காக சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் அஹமதாபாத் விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது பற்றி தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தனியார்மயமாக்குவது விமானத்துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.' என்றார்.
சென்னை ஏர்போர்ட் உள்பட நாட்டின் முக்கியமான 4 விமான நிலையங்களை தனியார் மயமாக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூ தெரிவித்தார். குஜராத் விமான போக்குவரத்து துறை மந்திரியுடன் மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய மந்திரி அசோக் கஜபதி ராஜூ, 'பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை அளிப்பதற்காக சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் அஹமதாபாத் விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது பற்றி தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தனியார்மயமாக்குவது விமானத்துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.' என்றார்.
0 comments:
Post a Comment