ஆலந்தூர்
சென்னை திருவான்மியூர் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் அருகே கடற்கரையில் வரிசையாக பல கடைகள் உள்ளன. அங்கு வேணுகோபால் (வயது 45) என்பவரது டீக்கடையில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது அங்கு இருந்த கியாஸ் சிலிண்டரும் வெடித்ததால் அருகில் உள்ள சங்கு, சிற்பிகள் விற்பனை செய்யும் சேகர் என்பவரது கடையும், ஒரு குளிர்பானக்கடையும் எரிந்தது.
உடனே அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சேகருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், திருவான்மியூர், ராஜ்பவன் பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் 3 கடைகளில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment