ஆலந்தூர்
பாலவாக்கத்தில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
என்ஜினீயர் தற்கொலை
சென்னையை அடுத்த பாலவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் இபேகா (வயது 21). இவரது சொந்த ஊர் பெங்களூர். திருமணம் ஆகாதவர். இவர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தந்தனர்.
நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்–இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது இபேகா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் என்ன?
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் இபேகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment