Monday 19 January 2015

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 3 பேர் மனு தாக்கல்

திருச்சி

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஸ்ரீரங்கம் தாசில்தாருமான காதர் மைதீனிடம் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதே அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளராக தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜனும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி வி.மனோகரனிடம் குளித்தலையை சேர்ந்த எஸ்.கே. மனோகரன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். எனவே முதல் நாளான இன்று மட்டும் 3 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive