Monday 19 January 2015

அரியானாவில் பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலி: 10 பேருக்கு நோய் பாதிப்பு

அரியானாவில் பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலி: 10 பேருக்கு நோய் பாதிப்புசண்டிகர், ஜன. 19-

அரியானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியுள்ளதும் தெரிய வந்தது.

கடந்த சில தினங்களில் 14 நோயாளிகளுக்கு பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதில் 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் மாநில கூடுதல் சுகாதார துறை தலைமை செயலாளர் ராம் நிவாஸ் தெரிவித்தார்.

மேலும், சிகிச்சைக்கு தேவைப்படும் மாத்திரைகள் போதுமான அளவு இருப்பதாகவும், சிகிச்சைக்கென்று பிரத்யேகமாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் நாட்டின் எல்லா மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive