புதுடெல்லி,
புதுடெல்லியின் கவுதாம்பூரி பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதுவரையில் இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுதாம்பூரியில் இன்று அதிகாலையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததுள்ளது. இதுதொடர்பாக தீயணைப்பு படை வீரர்களுக்கு காலை 3.12 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் 10 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசுகையில், "தேடுதல் மற்றும் மீட்பு பணி அதிகாலையிலே தொடங்கிவிட்டது. இதுவரையில் இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது." என்று கூறினார்.
இதற்கிடையே இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடத்தில் பலர் சிக்கியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment