Wednesday 21 January 2015

உத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 6 பேர் பலி

உத்தரபிரதேசம் ஷாகான்பூர் மாவட்டத்தில் உள்ள சதார் பஜார் என்ற பகுதியில் விரைவு ரெயில் மோதி 6 பேர் பலியானார்கள்.

ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற 3 இளம்பெண்கள் மற்றும் 3 குழந்தைகளும் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

உத்தரபிரதேசத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் தண்டவாளத்தில் கடக்கும் பயணிகள் ரெயில் மோதி அடிக்கடி விபத்துகுள்ளாவது நிலவி வருகிறது.

இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை கைபற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive