புதுடெல்லி,
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவரை தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர் சாசியா இல்மியும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க யாரை நிறுத்த போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. பா.ஜ.க. பாராளுமன்ற கூட்டத்திற்கு பிறகு கட்சி தலைவர் அமித்ஷா இதை அறிவித்தார். கிரண்பேடியின் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் என பா.ஜ.க தெரிவித்தது. கிரண்பேடி டெல்லியின் கிழக்கு கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவரை தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர் சாசியா இல்மியும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க யாரை நிறுத்த போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. பா.ஜ.க. பாராளுமன்ற கூட்டத்திற்கு பிறகு கட்சி தலைவர் அமித்ஷா இதை அறிவித்தார். கிரண்பேடியின் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் என பா.ஜ.க தெரிவித்தது. கிரண்பேடி டெல்லியின் கிழக்கு கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment