Tuesday 20 January 2015

தோல்வியின் போது பலிகடா ஆக்க, கிரண் பேடியை பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்துள்ளது ஆம் ஆத்மி

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சி கிரண் பேடியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்துள்ளது, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடையும் பட்சத்தில் அவர் பலிகடா ஆக்கப்படுவார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்–மந்திரி பதவி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சோம்நாத் பார்தி, “பாரதீய ஜனதா கட்சி கிரண் பேடியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்துள்ளது, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடையும் பட்சத்தில் அவர் பலிகடா ஆக்கப்படுவார், ஆம் ஆத்மி கட்சிக்கு வளர்ந்துவரும் புகழும், பெருகிவரும் ஆதரவு காரணமாக பாரதீய ஜனதாவிற்கு வெற்றியின் மீது நம்பிக்கையில்லை. கிரண்பேடி ஆம் ஆத்மி கட்சிக்கு சவாலானவர் இல்லை,” என்றார்.  பாரதீய ஜனதாவின் இந்த தேர்வு அதற்கு பாதகமான விளைவையே ஏற்படுத்தும் என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive